யாழ். திருநெல்வேலியில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 150, 000 ரூபா தண்டம்
யாழ்ப்பாணம்(Jaffna) - திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவருக்கு யாழ். நீதிமன்றத்தினால் 150,000 ரூபா தண்டமாக விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
உரிமையாளருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள்
இதன்போது காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடி உரிமையாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகளுடன் யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் 18 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கினை இன்றையதினம் (07) விசாரணைக்கு எடுத்துகொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் பல்பொருள் அங்காடி உரிமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு 150, 000 ரூபா தண்டம் விதித்ததுடன் உரிமையாளரிற்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri