1.15 டிரில்லியன் டொலர் இராணுவ மசோதா: அமெரிக்க பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேறிய ட்ரம்ப்பின் தீர்மானம்
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2027ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு அதிகாரமளிப்புச் சட்ட மசோதா (NDAA) 216-212 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிய 1.5 டிரில்லியன் டொலர் இராணுவ வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1.15 டிரில்லியன் டொலர் மதிப்பிலான இந்த மசோதா முதன்மையாக ஈரானுக்கு எதிரான போருக்கான நிதியுதவியையும், அமெரிக்க-இஸ்ரேல் இராணுவத் தொழில்நுட்பக் கூட்டுறவை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போருக்கான அதிகப்படியான செலவு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைப்பு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
சர்ச்சைக்குரிய விதி
மேலும், இஸ்ரேலுடனான இராணுவ விநியோகச் சங்கிலி மற்றும் தொழில்நுட்பங்களை இணைக்கும் பிரிவு 219 நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என குடியரசுக் கட்சியின் தோமஸ் மாசி போன்ற சில பிரதிநிதிகளே விமர்சித்துள்ளனர்.

இதேவேளையில், வாக்களிப்பு முறைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் 'SAVE America Act' என்ற சர்ச்சைக்குரிய விதியும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக இந்த மசோதா அடுத்து செனட் சபையில் ஒப்புதல் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
YOU MAY LIKE THIS VIDEO