உலகக்கிண்ண ஆடவர் கால் பந்தாட்ட போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர் நியமிப்பு
உலகக்கிண்ண ஆடவர் கால் பந்தாட்ட போட்டியில் முதன்முறையாக, பெண் நடுவர் ஒருவர் தலைமையில் போட்டியை முன்னெடுக்கவுள்ளனர்.
நாளை வியாழன் (1ம் திகதி) அன்று அல் பேட் மைதானத்தில் ஜெர்மனி- கொஸ்டாரிகா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்த பெண் நடுவர் பங்கேற்கவுள்ளார்.
ஃபிரான்ஸின் 38 வயதான ஸ்டெபானி ஃப்ராபார்ட் என்ற இந்த பெண், கால்பந்தில் ஏற்கனவே பல மைல் கற்களை எட்டியுள்ளார். லீக் 1 மற்றும் யு.எஃப்ஏ செம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நடுவராக இருந்த முதல் பெண்மணி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பிரேசிலின் உதவி நடுவர்களான நியூசா பேக் மற்றும் மெக்சிகோவின் கரேன் தியாஸ் மெடினா ஆகியோர் குழு E ஆட்டத்தில் பெண் நடுவரான ஃப்ராபார்ட் உடன் இணைவார்கள்.
உலகக்கிண்ண போட்டிகள்
உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன், உலகக்கிண்ண கால் பந்தாட்ட நடுவர்கள் குழுவின் தலைவரான, பியர்ளுகி கொலினா ( Pierluigi Collina) இந்த மூன்று பெண் நடுவர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
குறித்த மூன்று பேரும்,
பெண்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர்கள், உலகக்கிண்ண நடுவர்களாகவே
தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும், அவர்கள் எந்த ஆட்டத்திற்கும் நடுவராக இருக்க
முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.