வென்தேசிவத்த சுத்தா பொலிஸாரால் கைது!
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” என்பவர் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை(Kalutara) பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், களுத்துறை, வென்தேசிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மேலும் இரண்டு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணை
சந்தேகநபர் களுத்துறை, நாகொடை, பயாகலை மற்றும் வென்தேசிவத்த ஆகிய பிரதேசங்களில் பல்வேறு நபர்களிடம் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து அவர்களை அச்சுறுத்தித் தாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயாகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri