நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறை மோதல்! கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ள சிறை அதிகாரிகளின் உடல்கள்
நீர்கொழும்பு சிறையில் நேற்று முன் தினம் (06) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த ஏழு சிறை அதிகாரிகளின் உடல்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொரல்லை சிறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன் தினம் (06) நீர்கொழும்பு சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்திருந்தனர்.
இறுதி அஞ்சலி
இந்நிலையில், இவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கொழும்பிற்கு எடுத்துச்செல்லப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரி எஸ். எச். எஸ். சந்திரவன்ச, வார்டன்கள் எஸ். டி. எஸ். அபேவன்ச, ஏ. டி. தரங்கா, டி. எம். ஆர். திலகசிறி, பி. என். என். தரங்கா, டி. டட்லி, புஷ்ப குமார மற்றும் ஆர். பி. ஆர். சஞ்சீவ ஆகியோரின் உடல்களும் இதே முறையில் எடுத்துச்செல்லப்பட உள்ளன.
இந்த மோதலில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.