இந்தியாவில் இருந்து வந்தபோது கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட ஹரக் கட்டாவின் நண்பர்
வெலிகம சஹான் எனப்படும் ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகெலம் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர், கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(28) மாலை இந்தியாவில் இருந்து திரும்பும் போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
வெலிகமவைச் சேர்ந்த 32 வயதான சந்தேக நபர், மாத்தறை மற்றும் பாணந்துறை காவல் பிரிவுகளில் நடந்த பல கொலைகள் மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவர் நதுன் சிந்தக விக்ரமரத்ன, அல்லது ஹரக் கட்டாவின் நண்பர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சஹான் நேற்று இரவு மாலை 6:30 மணியளவில் சென்னையிலிருந்து வந்தபோது, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் சந்தேக நபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
