முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம்

Sri Lankan Tamils Mullaitivu Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Sep 24, 2023 01:35 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report

முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பிரதான வீதியோடு இணையும் குறுக்கு வீதிகளை வெட்டி துண்டாடுவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நீர்க்குழாய்களை மண்ணில் புதைப்பதற்காக வீதியின் குறுக்கே இவ்வாறான குழிகள் ஆங்காங்கே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான வீதியான நெடுங்கேணி - தண்ணீரூற்று மற்றும் முல்லைத்தீவு - மாங்குளம் வீதியின் இருமருங்கிலும் உள்ள இணைப்பு வீதிகளில் பாதசாரிகள் இந்த சவாலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

பிரதான வீதியின் அருகாக செல்லும் நீர்வழங்கல் குழாயிலிருந்து துணை இணைப்புக்கான சிறு நீர் வழங்கல் குழாய்களை இணைக்கும் போது வீதியை துண்டாடுகின்றனர். பிரதான வீதியுடன் குறுக்கு வீதி இணையும் இடத்திலேயே இந்த துண்டாடல் நிகழ்வதாக மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.

கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய 24 இளம் ஜோடிகள்

கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய 24 இளம் ஜோடிகள்

பயணிகளின் எதிர்கொள்ளும் இடர்பாடுகள்

குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பயணிகள் துண்டாடப்பட்ட பாதையை கடக்கும் போது இடர்களை சுமக்கின்றனர்.

குறுக்கு வீதியும் பயணத்திற்கு ஏற்றால் போல் சீர்செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அதனை குறுக்காக வெட்டி துண்டாடி நீர்க்குழாய்களை பொருத்திவிட்டு மீண்டும் செப்பனிடுகின்றனர்.

முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம் | Water Supply Office Issue Mullaitivu

ஆனலும் அவை வழமையான சீரான பாதையமைப்பை கொடுக்கவில்லை. ஈருருளிகள் மற்றும் உந்துருளிகள் பயணிக்கும் போது துண்டாடிய இடத்தில் ஏறி விழும் நிலையால் பயணத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

இவை பற்றி பயணிகள் சிலரிடம் கருத்துக் கேட்ட போது பயணிகள் விசனப்பட்டு கருத்துக்களை கூறியிருந்தனர்.

புல்மோட்டையில் பிக்கு அடாவடி : பொதுமக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல்(Video)

புல்மோட்டையில் பிக்கு அடாவடி : பொதுமக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல்(Video)

பாதையமைப்பில் உள்ள தவறு

வீதியபிவிருத்தியின் போது நீர் வழங்கல் வடிகால் அமைப்பை கருத்திலெடுத்து திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தால் இப்போது வீதிகளை துண்டாடி அசௌகரியத்தை ஏற்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது என ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் இது பற்றி கருத்துரைத்திருந்தார்.

அவர் மேலும் கூறும் போது, ''வெட்டப்படும் இடங்களில் சரியான முறையில் அழுத்தம் கொடுத்து பாதை சீர் செய்யப்படுவதில்லை.

முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம் | Water Supply Office Issue Mullaitivu

சீமெந்து கலவையை பயன்படுத்தும் போது வெட்டப்பட்ட இடங்களை அருகிலுள்ள பாதையமைப்புக்கு பொருந்துமாறு சீர்செய்து கொள்வதில் கவனமெடுப்பதாக தெரியவில்லை.

இப்போதுள்ள நிலையில் வெட்டப்படும் இடங்களில் திருத்தமாக வீதியை சரிசெய்தல் வேண்டும். அப்படி மேற்கொள்ளும் செயற்பாடுதான் பயணிகளுக்கு இயல்பான பயணிப்பு அனுபவத்தை வழங்கும்.

ஆயினும் இது பற்றி சுட்டிக் காட்டிய போதும் காது கொடுத்து கேட்பாரில்லை.'' என தகவல் வெளியிட்டிருந்தார்.

அரசியல் கொலைகள் குறித்த விரிவான தகவல்கள் எனக்கு தெரியும்! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அசாத் மௌலானா

அரசியல் கொலைகள் குறித்த விரிவான தகவல்கள் எனக்கு தெரியும்! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அசாத் மௌலானா

தேடலில் அவதானித்தவை

தண்ணீரூற்றில் பாதைகளுக்கு குறுக்கே வெட்டப்படும் நிலையை தேடிய போது பல இடங்களில் ஒரே மாதிரியான அவதானிப்புக்கள் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம் | Water Supply Office Issue Mullaitivu

இப்போதும் வெட்டப்படுதலும் சீரற்ற முறையில் மீள் பாதையிடலையும் அவதானித்ததோடு முன்னர் வெட்டிய இடங்களில் மேற்கொண்ட பாதையமைப்பு கீழிறங்கலுக்குள்ளாகி பாதையின் குறுக்கே பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளமையும் அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலாவத்தையில் பிரதான வீதியுடன் தீர்த்தப்பாதையை இணைக்கும் இணைப்பில் வெட்டப்பட்ட பாதை பல தடவை மீள் திருத்தத்துக்குட்பட்டிருந்தது.

முத்தையன்கட்டை ஒட்டுசுட்டானுடன் இணைக்கும் பிரதான வீதியில் சீமெந்து பாதையமைப்பு பகுதிகளில் பல இடங்களில் பாதையின் குறுக்கே வெட்டப்பட்டு நீர்க்குழாய்களை புதைத்து மீள் பாதையமைப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

இவை பயணம் செய்யும் போது ஏறிவிழுதல் எனும் பயணச்சிரமத்தை ஏற்படுத்துவதை அனுபவிக்க முவிவதாக தெரிவித்துள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு: களுபோவில போதனா வைத்தியசாலையில் சம்பவம்

சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு: களுபோவில போதனா வைத்தியசாலையில் சம்பவம்

பாராமுகமாக இருப்பது ஏன்

பாதைகள் அமைக்கப்படுவதும் மக்களுக்காகவே! நீர்க்குழாய்களை பொருத்துவதும் மக்களுக்காகவே! இவையிரண்டையும் மக்களிலிருந்து பணியமர்த்தப்பட்ட ஊழியர்களே செய்து கொண்டுமிருக்கின்றனர்.

துறைசார்ந்த நிபுணர்களின் மேற்பார்வையில் நிகழும் இப்பணிகளில் குறைசொல்லும் சூழல் எப்படி ஏற்படுகின்றது?

முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம் | Water Supply Office Issue Mullaitivu

பணிகளை முன்னெடுக்கும் போது உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.பணிகளை செயற்படுத்தும் போது அதீத கண்காணிப்பையும் பொது மக்களின் கருத்துக்களையும் கருத்திலெடுத்தல் வேண்டும்.

மக்களுக்கான தேவையை மக்களே செயற்படுத்துகின்றனர் என்ற சனநாயக கொள்கையை இப்போது இங்கே கருத்திலெடுத்தால் இந்த இடருக்கு பொருத்தமான தீர்வொன்று கிடைக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பொறியியல் பீட மாணவரொருவர் கருத்துரைத்திருந்தார்.

முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம் | Water Supply Office Issue Mullaitivu

முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம் | Water Supply Office Issue Mullaitivu

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: ஹசரங்க தொடர்பில் இலங்கை அணி தகவல்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: ஹசரங்க தொடர்பில் இலங்கை அணி தகவல்

முல்லைத்தீவில் வீதிகளை வெட்டி துண்டாடும் நீர்வழங்கல் அலுவலகம் | Water Supply Office Issue Mullaitivu

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US