அரசியல் கொலைகள் குறித்த விரிவான தகவல்கள் எனக்கு தெரியும்! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அசாத் மௌலானா

2019 Sri Lanka Easter bombings Gotabaya Rajapaksa Sivanesathurai Santhirakanthan Channel 4 Easter Attack Channel 4
By Benat Sep 24, 2023 11:56 AM GMT
Report

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து எனக்கு தெரிந்திருந்த தகவல்களிற்கு அப்பால் 2005 முதல் 2015 வரை இடம்பெற்ற பல அரசியல் படுகொலைகள் குறித்த பலவிரிவான தகவல்கள் எனக்குதெரியும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய தகவல்களை வெளியிட்ட ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர் அசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புல்மோட்டையில் பிக்கு அடாவடி : பொதுமக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல்(Video)

புல்மோட்டையில் பிக்கு அடாவடி : பொதுமக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல்(Video)

குறித்த அறிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற அன்று மாலை ஊடகங்கள் மூலம் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்தே நான் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

கோட்டாபயவுக்கு ஆதரவளித்த பிள்ளையான்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலமும் சிஐடி விசாரணை மூலமும் நான் சந்திக்க வேண்டும் என சுரேஸ் சாலே விரும்பிய நபர் ( தாக்குதல் இடம்பெற்ற அன்று காலை) ஜமீல் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

அரசியல் கொலைகள் குறித்த விரிவான தகவல்கள் எனக்கு தெரியும்! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அசாத் மௌலானா | Channel4 Telecast Shocking Video Easter Attacks

அவர் தாஜ்சமுத்திராவில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கிருந்து வெளியேறி தெகிவளையில் உள்ள சிறிய ஹோட்டலில் தன்னை வெடிக்கவைத்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பிள்ளையானும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரும் ஆதரவளித்தனர்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் சுரேஸ் சாலே இலங்கை திரும்பினார் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இன்றும் அந்த பதவியில் தொடர்கின்றார்.

பிள்ளையானிற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால் முன்னாள் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற மறுத்தார்.

2020 ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெற்றவேளை பிள்ளையான் தொடர்ந்தும் சிறையிலேயே இருந்தார். பொதுத்தேர்தலின் பின்னர் பிள்ளையான் என்னையும் தனது சகோதரரையும் சுரேஸ் சாலேயை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

விடுதலை செய்யக் கோரிய பிள்ளையான்

கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு பதவிக்கு வந்தனர் என்பதை மறக்கவேண்டாம். தன்னை விடுதலை செய்யாவிட்டால் அதற்காக கடும் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்குமாறு பிள்ளையான் எங்களை கேட்டுக்கொண்டார்.

அரசியல் கொலைகள் குறித்த விரிவான தகவல்கள் எனக்கு தெரியும்! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அசாத் மௌலானா | Channel4 Telecast Shocking Video Easter Attacks

சில நாட்களின் பின்னர் சட்டமா அதிபர் மட்டக்களப்பு நீதிமன்றில் பிள்ளையானிற்கு எதிரான வழக்கை விலக்கிக்கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து எனக்கு தெரிந்திருந்த தகவல்களிற்கு அப்பால் 2005 முதல் 2015 வரை இடம்பெற்ற பல அரசியல் படுகொலைகள் குறித்த பல விரிவான தகவல்கள் எனக்குதெரியும்.

டிரிபோலி பிளட்டுனே இந்த படுகொலைகளில் பலவற்றை செய்திருந்தது. இது இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் இயங்கிய இரகசிய கொலைக்குழு. முதலில் இந்த குழுவிற்கு மேஜர் பிரபாத் புலத்வட்ட தலைமைதாங்கினார். அதன் பின்னர் கேணல் சாமி குணரத்தின இதற்கு தலைமைதாங்கினார்.

அவ்வேளை இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் கமால் கருணாசேனவின் நேரடிகட்டுப்பாட்டின் கீழ் இந்த பிரிவு செயற்பட்டது. பின்னர் இவர் இராணுவபிரதானியாக பதவி உயர்த்தப்பட்டார்.  இந்த குழுவினர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை அவரிடமிருந்து நேரடி உத்தரவை பெற்று செயற்பட்டனர். 

மேலும் பல தகவல்கள்

யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பல அரசியல் படுகொலைகளிற்கு இந்த குழுவினரே காரணம். படுகொலைகள் பத்திரிகையாளர்கள் படுகொலைகளிற்கு இவர்களே காரணம்.  குறிப்பாக இவர்களே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப்பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் போன்றவர்களின் கொலைகளிற்கு காரணம்.

அரசியல் கொலைகள் குறித்த விரிவான தகவல்கள் எனக்கு தெரியும்! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அசாத் மௌலானா | Channel4 Telecast Shocking Video Easter Attacks

 மேலும் லசந்த விக்ரமதுங்க, சிவராம், நடேசன் படுகொலைக்கும் டிரிபோலி பிளட்டுனே காரணம்.   கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட ஆகியோர் காணாமல்போனமைக்கும் டிரிபோலி பிளட்டுனே காரணம்.

இராணுவ புலனாய்வு பிரிவினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினரும் இணைந்து செய்த படுகொலைகள் குறித்து மேலும் பல தகவல்கள் என்னிடம் உள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3பேர் பலி

அவர்கள் செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனது உயிருக்கு ஆபத்து என்பதால் அவர்களிடமிருந்து விலகியும் இருக்கமுடியவில்லை

இந்த நிமிடம் வரை இலங்கை அதிகாரிகள் என்னை கடத்தி சிறைப்பிடித்து கொலை கூட செய்வார்கள் என நான்அச்சம் கொண்டுள்ளேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் சூத்திரதாரிகள் குறித்த உண்மையை வெளிப்படுத்த தவறியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் திலீபனின் நினைவிடத்தில் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அஞ்சலி(Video)

யாழில் திலீபனின் நினைவிடத்தில் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அஞ்சலி(Video)

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து விபத்து: இருவர் பலி

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தையும் விசாரணை செய்ய வேண்டும்(Video)

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தையும் விசாரணை செய்ய வேண்டும்(Video)


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US