யாழில் திலீபனின் நினைவிடத்தில் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அஞ்சலி(Video)
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக இன்று
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் நாதஸ்வர கலைஞர் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றார்.

மனைவியின் பூர்வீக இல்லம்
அதன் பின்னர் சந்தோஸ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி உள்ளிட்டவர்கள் கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஸ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு ரசிகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சந்தோஸ் நாராயணனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பாரிய இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan