உக்ரைனில் போர் குற்றம் சுமத்தப்பட்ட முதல் ரஷ்யருக்கு எதிரான தீர்ப்பு விரைவில்!
உக்ரைனில் போர் ஆரம்பித்த பின்னர் நடைபெறும் முதல் போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படையெடுப்பு ஆரம்பித்த சில நாட்களில் நிராயுதபாணியான ஒரு குடிமகனைக் கொன்றதாக ரஷ்ய படை சிப்பாயான வாடிம் ஷிஷிமர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த படை சிப்பாயும், நான்கு படையினரும் சிற்றுாந்து ஒன்றை திருடி, பயணித்துக்கொண்டிருந்தபோது, ஈருருளியில் பயணித்த குடிமகன் ஒருவரை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட ரஷ்ய படைச்சிப்பாய் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள அவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில், ரஷ்யர்கள் இதுவரை 10,000 க்கும் அதிகமான போர்க்குற்றங்களை புரிந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் மொஸ்கோ இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது.
இருப்பினும் விசாரணையாளர்கள் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) முன்னிலைப்படுத்துவதற்காக சாத்தியமான போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.