ஆஷஸ் இறுதிப் போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனை
அவுஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி போட்டி (8)சிட்னியில் நடைபெற்றது.
இதில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இங்கிலாந்து அணி
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதனைதொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 567 ஓட்டங்களை பெற்றது. பின்னர் 183 ஓட்டங்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார்.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார்.
மற்ற வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ஓட்டங்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் எடுத்தது.119 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
கடைசி நாள் ஆட்டம்
இன்று(8) கடைசி நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது.

சிறப்பாக விளையாடி வந்த பெத்தேல் 154 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
2ஆவது இன்னிங்ஸ்
168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் அவுஸ்திரேலிய 2-வது இன்னிங்சை ஆடியது.
இந்த இலக்கை எடுப்பதற்குள் அவுஸ்திரேலியா 5 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 29 ஓட்டங்களிலும், வெதரால்டு 34 ரன்னிலும் ஜோஷ் டங் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள்.

அடுத்து லபுஷேன் 37 ஓட்டங்களிலும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 12 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 6 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். 121 ஓட்டங்களில் 5 விக்கெட்டை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி-கேமரூன் கிரீன் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
அவுஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட்டும் தொடர் நாயகனாக ஸ்டார்க்கும் தேர்வு பெற்றனர்.
அத்துடன் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
சாதனை
மேலும்,இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 879 பேர் வருகை தந்துள்ள நிலையில் அந்த வருகை சாதனையை இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் முறியடித்துள்ளது.