அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
பிராந்தியத்தில் அவசர உதவிக்காக இராணுவ விமானங்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் நேற்று(13) ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர விவாதங்கள்
இரண்டு நட்பு நாடுகளுக்கு இடையே இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து குறித்த கலந்துரையாடல் அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பிரித்தானியா நீண்ட கவலைகளை கொண்டுள்ளது எனவும் இஸ்ரேலின் தற்காப்புக்கான உரிமையை அங்கீகரிக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போர் பதற்றம் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவில் நாளை தொடங்கும் G7 உச்சிமாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில், நட்பு நாடுகளுடன் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் ஸ்டார்மர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
