போர் பதற்றத்திற்கு மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு-மோடிக்கிடையில் கலந்துரையாடல்
இந்திய பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
போர் பதற்றம்
இதனிடையே, ஈரானில் உள்ள அணு உலைகள், அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் இன்று(13) அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது.
.Received a phone call from PM @netanyahu of Israel. He briefed me on the evolving situation. I shared India's concerns and emphasized the need for early restoration of peace and stability in the region.
— Narendra Modi (@narendramodi) June 13, 2025
இந்த தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் உள்பட 70 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
பிரதமர் மோடி
இந்தநிலையில் இன்று பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்,
“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வளர்ந்து வரும் நிலைமை குறித்து அவர் எனக்கு விளக்கினார். இந்தியாவின் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட நான், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri
