அடுத்த வருடம் பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
ஐரோப்பிய கடவுச்சீட்டு (European Passports) வைத்திருப்போர், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதி முதல் பிரித்தானியாவிற்குள் (UK) நுழைவதற்கு, முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, குறித்த திகதியில் இருந்து, மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization - ETA) என்னும் இலங்கையில் உள்ள நடைமுறையை பிரித்தானியாவும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய கடவுச்சீட்டு
அதேவேளை, பிரித்தானியாவிற்குள் நுழைவது மாத்திரமன்றி, அந்நாடு வழியாக வேறொரு நாட்டிற்கு டிரான்ஸிட் மூலம் செல்வதற்கும் முன்னனுமதி பெற வேண்டும்.

இந்நடைமுறையானது, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாட்டு பிரஜைகளுக்கு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் அந்நாட்டின் உத்தியோகபூர்வ இணைய தளங்களில் தகவல்களையும், அனுமதிக்கான விண்ணப்பங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan