அம்பாறையில் போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது! தீவிரப்படுத்தப்படும் விசாரணை
அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த குற்றசாட்டின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(09.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் இருவர் கைது
அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்ட போதே குறித்த இரு சந்தேக நபர்களும் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, 70 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் பணம், இலத்திரனியல் தராசு மற்றும் நவீன தொலைபேசிகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 31 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்றும் இவர்கள் சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்பவர்கள் என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தரை மற்றும் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.