தற்காலிக சபாநாயகர் பதவியேற்பிலும் முதலில் ஒலித்த வந்தே மாதரம்…! மீண்டும் வெடித்த சர்ச்சை
புதிய இணைப்பு
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டமை குறித்து விமர்சனங்கள் வந்த பிறகும் அதை மாற்றிக் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கின்றது. வந்தே மாதரம், தேசியகீதம் பாடப்பட்டு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது கண்டனத்திற்குரியது.” என்றும் வி.சி.க. தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்” முதலிடம் பாடப்பட்டுள்ளது.
இதன் பிறகு தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆளுநர் மாளிகைக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு ஆளுநர் அர்லேகர், எம்.எல்.ஏ. கருப்பையாவை தற்காலிக சபாநாயகராக பதவி பிரமாணம் செய்துவைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியிலும், மீண்டும் வந்தேமாதரம் பாடல் முதலில் ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் ஒலிக்கப்பட்டுள்ளது.முன்னதாக காலை முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தது.
இதற்கு தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்த்தாய் பாடல் 3 ஆவதாக பாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தவெக தலைவர் விஜய் முதல்வராக சற்றுமுன்னர் பதவியேற்ற பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமை பேசுபொருளாகியுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த விழா, தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் பிரம்மாண்டமாக அரங்கேறியுள்ளது.
"ஜோசப் விஜய் என்னும் நான்.." நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியும் முக்கிய புள்ளிகள் - தயார்நிலையில் பலத்த பாதுகாப்பு வலயம்
பிரம்மாண்ட பதவியேற்பு விழா
இந்த விழாவுக்கு ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், வன்னியரசு, செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கமான போதும் விஜய்யின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு முன்னர் வந்தே மாதரம் பாடப்பட்டமை பேசுபொருளாகியுள்ளது.
மத்திய அரசு விழாக்களில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யின் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்பு
பதவியேற்பு விழாவை மாநில அரசு நடத்தவில்லை என்றும், ஆளுநர் மாளிகை நடத்துவதனால்தான் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. விஜய்யை போல் அனைவரும் ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றுள்ளனர்.
இந்த விழாவில் முதல்வராக விஜய் பதவியேற்றதும், அமைச்சர்கள் ஆனந்த்,ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றனர்.
ஜோசப் விஜய் எனும் நான்.. ஆண்டவன் மீது ஆணையிட்டு.. உணர்ச்சி பொங்க முதலமைச்சர் பதவியை ஏற்றார் விஜய் LIVE





அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri