திருகோணமலை நீதிமன்ற ஆவணங்களைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள காணி வழக்கு ஒன்றின் ஆவணங்களைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை துறைமுக பொலிஸாரால் சந்தேகநபர்கள் நேற்று(31.05.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னணி மற்றும் கைது நடவடிக்கை
குறித்த காணி வழக்கு ஆவணங்கள் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட வழக்கு ஆவணம் கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆவணத் திருட்டிற்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க உத்தரவு இதேவேளை, மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் இருவரினாலேயே இந்த வழக்கு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி, நீதிமன்றப் பதிவாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு உடனடியாக அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 16 மணி நேரம் முன்
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam