மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரிய கல்லாற்றில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், மகிழுந்து மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் கம்பத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழுப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த மகிழுந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பெரியகல்லாற்றில் வைத்து அருகிலிருந்த ஸ்ரீலங்கா தொலைத் தொடர்புக்குச் சொந்தமான கம்பத்தில் மோதியதனாலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், எனினும் அவர்கள் இருவரும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியர்களான தம்பதிகளாவர்.
இவ்விபத்துச் சம்பவத்தில் மகிழுந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை தொலைத் தொடர்பு கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த
களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam