உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை
புதிய இணைப்பு
ஈரான், தனது Fattah-1 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்றாம் இணைப்பு
இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் உள்ள அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு ஈரான் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் அடுத்த தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ள, இஸ்ரேலின் தெல்எவிவ் பகுதியின் திட்ட வரைபடத்தையும் ஈரான் வெளியிட்டுள்ளது.
Urgent Warning – English follows the Hebrew text | אזהרה דחופה – הטקסט באנגלית מופיע לאחר העברית
— Daily Iran Military (@IRIran_Military) June 18, 2025
אזהרת בטחונית מיידית | אזור נווה צדק, תל אביב
לידיעת כל השוהים באזור המופיע במפה המצורפת (רמת החייל בצפון־מזרח תל אביב):
עזבו את האזור מיידית.
למען ביטחונכם, عזבו את המקום בהקדם… pic.twitter.com/IynRV00R67
இரண்டாம் இணைப்பு
தெஹ்ரான் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளன.
ஈரானிய தலைநகரின் சில பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஐடிஎஃப் சற்று முன்னர், உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், தற்போது தெஹ்ரானில் இஸ்ரேலிய ஏவுகணைகள் தொடர்ந்து ஏவப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tehran being bombed pic.twitter.com/P2vyQM8Uzc
— Dustin (@systematictism) June 17, 2025
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஈரானில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மணித்தியாலத்திற்குள் ட்ரம்ப் - நெதன்யாகுவுக்கு இடையில் ஒரு தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், குறித்த அழைப்பிற்கு பின்னர், ஈரானின் தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.
அடுத்த இலக்கு
அதேவேளை, இஸ்ரேலிய பாதுகாப்பு படை, ஈரானில் அடுத்து தாக்குமல் நடத்தவுள்ள இலக்கு குறித்து வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ஐடிஎப், எக்ஸ் தளத்தில் குறித்த வரைபடத்தை வெளியிட்டுள்ளதுடன், "குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர்களுக்கும், தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மக்களுக்கும் உடனடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔴 هشدار فوری به کارکنان و نیز کلیه افرادی که در منطقه ۱۸ تهران بر اساس ناحیه مشخص شده بر روی نقشه ضمیمه قرار دارند.
— ارتش دفاعی اسرائیل | IDF Farsi (@IDFFarsi) June 17, 2025
⭕️ طی ساعات آینده ارتش اسرائیل در این ناحیه همچنان که طی روزهای اخیر در محدوده تهران عمل نموده است، برای حمله به زیرساختهای نظامی رژیم ایران وارد عمل خواهد شد.… pic.twitter.com/kBEopT13ZR
வரும் சில மணிநேரங்களில், இஸ்ரேலிய இராணுவம் தெஹ்ரானில் உள்ள ஈரானிய ஆட்சியின் இராணுவ உள்கட்டமைப்பைத் தாக்க இந்தப் பகுதியில் நடவடிக்கை எடுக்கும்.
பொதுமக்களே, உங்கள் பாதுகாப்பிற்காக, தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பகுதியை உடனடியாக விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பகுதியில் நீங்கள் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
