இஸ்ரேலின் பல பகுதிகளில் ஒலித்த சைரன்கள்! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
ஈரானில் இஸ்ரேலியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் முகமாக ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் அடையாளம் கண்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்காரணமாக இஸ்ரேலில் உள்ள மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
🚨Sirens sounding across northern Israel following another barrage of Iranian missiles🚨 pic.twitter.com/YEddAQE8mD
— Israel Defense Forces (@IDF) June 17, 2025
வெளியேறுவதற்கான அறிவிப்பு
தங்குமிடத்தை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பு நேரம் சுமார் 20 நிமிடங்கள் என இஸ்ரேல் கூறியுள்ளது.
முன்னதாக மேற்கு ஈரானில் இஸ்ரேலியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இஸ்ரேலியப் படைகள் "மேற்கு ஈரானில் தரையிலிருந்து வான் ஏவுதளங்கள் மற்றும் ரேடார்களில் உளவுத்துறை அடிப்படையிலான தாக்குதல்களை" நடத்தியுள்ளதாக ஐ.டி.எஃப் மேலும் கூறியது.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
