ஈரானை இலக்கு வைத்த இஸ்ரேலின் தாக்குதல்! 20க்கும் மேற்பட்ட மூத்த தளபதிகள் பலி
இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதலில் IRGC மற்றும் ஈரானிய ஆயுதப் படைகளின் தளபதிகள் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட மூத்த ஈரானிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானிய ஆயுதப் படைகளுக்கான உளவுத்துறைத் தலைவர் கோலம்-ரேசா மர்ஹாபி மற்றும் ஐ.ஆர்.ஜி.சியின் தரைப்படை ஏவுகணை தளபதி முகமது பகேரி ஆகியோரை இஸ்ரேலிய இராணுவம் கடந்த சனிக்கிழமை கொன்றமையை உறுதிப்படுத்திய நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த திடீர் தொடக்கத் தாக்குதலில் IRGC மற்றும் ஈரானிய ஆயுதப் படைகளின் தளபதிகள் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட மூத்த ஈரானிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்மாயில் கானி
இஸ்ரேலின் கூற்றுப்படி, ஐ.ஆர்.ஜி.சியின் குட்ஸ் படையின் தளபதி இஸ்மாயில் கானி இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதனை ஐ.டி.எஃப் வெளியிட்ட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திறன்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிரான ஆட்சியின் முதன்மை தாக்குதல் கருவிகளாக செயல்படுகின்றன.
ஈரானின் தளபதி பகேரி ஈரானின் துப்பாக்கிச் சூடு அமைப்புகளை நிர்வகித்தார். அவரையும் இஸ்ரேல் தற்போது கொலைசெய்துள்ளது.
2024 ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் இல் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களுக்குப் பின்னால் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பகேரி தீவிர பங்கு வகித்தார்.
வான்வழித் தாக்குதல்
மேலும், தெஹ்ரானில் உள்ள ஒரு நிலத்தடி தலைமையகத்தில் IRGC-யின் விமானப்படைத் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே மற்றும் பல மூத்த அதிகாரிகளுடன் அவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் இந்த வான்வழித் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகின்றன.
சனிக்கிழமை அதிகாலை, ஈரான் ஏற்கனவே இஸ்ரேல் மீது ஒரு பெரிய பழிவாங்கும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தது.
ஐ.டி.எஃப்பின் கருத்தின் படி, ஈரானிய பிரதேசத்திலிருந்து மத்திய மற்றும் வடக்கு இஸ்ரேலை நோக்கி கிட்டத்தட்ட 100 பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாக ஏவப்பட்டன.
இருப்பினும், தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் அறிக்கையின்படி, தெஹ்ரான் முதலில் சுமார் 1,000 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ திட்டமிட்டிருந்ததாக ஈரானிய வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
ஆனால் ஏவுகணை தளங்கள் மீது இஸ்ரேலிய முன்கூட்டியே தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் ஈரானை அதன் பதிலடியைக் குறைக்க கட்டாயப்படுத்தியது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri