யாழ்.வடமராட்சி கட்டைக்காட்டில் நான்கு வீடுகள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நபர் ஒருவரால் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(15.4.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி உள்ளார்.
முறைப்பாடு
குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதல் மேற்கொண்ட நபரை உடனடியாக கைது செய்யுமாறு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு அளித்துள்ளனர்.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri