ட்ரம்பின் அதிரடி நகர்வு.. பதற்றத்தில் காத்திருக்கும் ஈரான் - இஸ்ரேல் தலைவர்கள்
புதிய இணைப்பு
இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த வெள்ளை மாளிகை அவசர அறை கூட்டம் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்குப் பிறகு முடிவடைந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றத்தில் தொடர்ந்து ஈடுபடுவதா என்பது தொடர்பில் ட்ரம்ப் பரிசீலிப்பதற்காக குறித்த சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேலிடம் உள்ள ஆயுதங்களால் அடைய முடியாத ஈரானின் மிக பாதுகாப்பான ஃபோர்டோ அணுசக்தி நிலையத்திற்கு எதிராக மிகப்பெரிய அமெரிக்க பதுங்கு குழி குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க எரிபொருள் விமானங்கள் இஸ்ரேலிய போர் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப அனுமதிப்பது குறித்தும் ட்ரம்ப் பரிசீலித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய அரசாங்கம் இதை மறுத்தாலும், ஈரானிய அணுசக்தி திட்டத்தை தகர்ப்பது ட்ரம்பின் முன்னுரிமையாக உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு சபையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் அடித்தளத்தில் உள்ள உயர் பாதுகாப்பு அடங்கிய அவசரநிலை அறையில் (The situation room) இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த பேச்சுவார்த்தை, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதலில் அமெரிக்கா மேலும் ஈடுபட வேண்டுமா என்பதை ட்ரம்ப் பரிசீலித்து வரும் தருணத்தில் நடைபெறுகிறது.
அவசர கூட்டம்
ட்ரம்பின் இந்த நடவடிக்கை உண்மையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுடன் அமெரிக்கா தனது மோதலை தொடர்வதா என பரசீலித்து வரும் நிலையில், அது நிறுத்தப்பட்டால் இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான போர் காரணமாக அவர் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதேவேளை, ட்ரம்ப், இன்று வெளியிட்டிருந்த தகவல்களில் ஈரானிய அயதுல்லா அதிகாரி அலி கமேனிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், ஈரானுக்கு கடும் எச்சரிக்கையாக இது அமைந்திருந்த நிலையில், தற்போது வெள்ளை மாளிகையில் இடம்பெற்று வரும் கூட்டம், மோதலின் தீவிரத்தன்மை அதிகரிப்பதை பிரதிபலிக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri
