திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை சார்ஜன் படுகாயம்
திருகோணமலை - புத்தளம் பிரதான வீதி ரொட்டவெவ பகுதியில் கெப் வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த விமானப்படை சார்ஜன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தின் போது பன்குளம் விமானப்படை முகாமில் கடமையாற்றி வரும் அனுராதபுரம்- கலன்பிந்துனுவெவ,படிகாரமடுவ பகுதியைச் சேர்ந்த எச்.எம்.நிஸாந்த குமார (36 வயது) என்பவரே காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
தனது வீட்டிலிருந்து கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வந்த கெப் வாகனம் நிறுத்தியதையடுத்து பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் கெப் வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த விமானப்படை சார்ஜனை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.