திறைசேரி செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்! சஜித் வலியுறுத்து

Sajith Premadasa Sri Lanka Ministry of Finance Sri Lanka Treasury Cyber Theft
By Rakesh Apr 27, 2026 04:53 AM GMT
Report

அரசின் அலட்சியம் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டினால் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி இழக்கப்பட்டிருப்பது பாரதூரமான விடயமாகும். இதற்குப் பொறுப்பேற்று திறைசேரி செயலாளர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(26.04.2026) இளம் தொழில் வல்லுநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பிக்குகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்தியதன் பின்னணி : வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பிக்குகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்தியதன் பின்னணி : வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கடனை திருப்பிச் செலுத்த

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இளைஞர்களை உள்வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களிலிருந்து இளைஞர்கள் நீக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், "ஒரே கையெழுத்தில் இளைஞர் பிரதிநிதித்துவத்தையும், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் இந்த அரசு இல்லாது செய்துவிட்டது.

இவ்வாறான சூழலில் இத்தகைய நிதி மோசடிகள் நடப்பதில் வியப்பில்லை" என்றும் சாடியுள்ளார்.

திறைசேரி செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்! சஜித் வலியுறுத்து | Treasury Secretary Must Resign Immediately Sajith

காணாமல்போன 2.5 மில்லியன் டொலர் விவகாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:- "இந்த நிதி இழப்பு அரசுக்குப் பெரிய பிரச்சினையாகத் தெரியாவிட்டாலும், இதனை ஈடுகட்ட மக்கள் மீதே மீண்டும் வரிச்சுமை சுமத்தப்படும்.

கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியான சூழலில், திறைசேரியில் இவ்வாறான இழப்பு ஏற்பட்டிருப்பது அரசின் அலட்சியத்தையே காட்டுகின்றது.

இதில் பாரிய ஊழல் நடந்திருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம்.

நாட்டுக்கு உண்மையை விளக்க

திறைசேரி செயலாளர் பதவி விலகிய பின்னரே வெளிப்படையான விசாரணை சாத்தியமாகும். நாடாளுமன்ற நிதி பற்றிய குழுவுக்குச் செயலாளரையும், மத்திய வங்கி ஆளுநரையும் அழைத்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

திறைசேரி செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்! சஜித் வலியுறுத்து | Treasury Secretary Must Resign Immediately Sajith

ஜனாதிபதி சைபர் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுத்தாலும், இறுதியில் நாட்டுப் பணம் திருடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கடன் தவணை செலுத்தத் தவறியமை குறித்தும் நிதி அமைச்சரும் செயலாளரும் நாட்டுக்கு உண்மையை விளக்க வேண்டும் என்றும் இதன்போது மேலும் வலியுறுத்தினார்.

பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி : 22 பிக்குகளுக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி : 22 பிக்குகளுக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US