துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இந்திய வீரர் திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழப்பு
இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலேயே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான இம்ரான் பாட்டேல் என்ற வீரரே இவ்வாறு கிரிக்கெட் மைதானத்தில் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக இந்த வீரர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தோள்பட்டை வலி
மகராஷ்டிர மாநிலத்தில் புனோவில் நடைபெற்ற போட்டியொன்றின் இடைநடுவில் குறித்த வீரர் மாரடைப்பு காரணமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையில் மரணித்துள்ளளார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பாட்டேல் சிறிது நேரம் விளையாடிய போது நெஞ்சு மற்றும் தோள்பட்டை பகுதியில் வலி எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட நடுவர்கள் அவரை பெவிலியன் திரும்ப அனுமதித்துள்ளனர். எனினும் பெவிலியன் திரும்பும் வழியிலேயே கீழே வீழ்ந்து பட்டேல் உயிரிழந்துள்ளார்.
இறுதி 4 ஓட்டங்கள்
இந்த போட்டியானது நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதாகவும் இதனால் பாட்டேல் உயிரிழந்த காட்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கீழே விழுந்த இம்ரானை மீட்டு வைத்தியசாலைலயில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பதற்கு முதல் பந்திலும் அவர் 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
புனேவில் சில மாதங்களுக்கு முன்னதாக மற்றுமொரு கிரிக்கெட் வீரர் மைதானத்தில் விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
