விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சுற்றுலா பயணி!
ஹட்டன் கொட்டகலை பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த உள்நாட்டு சுற்றுலா பயணியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து கொட்டகலைக்கு வருகை தந்த 60 வயதுடைய ரியென்சி பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது நண்பருடன் நேற்று(05.09.2025) சுற்றுலா விடுதிக்கு வந்து மது அருந்தி விட்டு விடுதியின் தரையில் விழுந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, அவர் மீண்டும் தனது அறைக்கு சென்றுள்ளார். இவை அனைத்தும் விடுதியின் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, இன்று அதிகாலை அவர் விடுதி அறைக்குள் இறந்து கிடந்ததை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri