கருப்பு ஜூலை நாளை வெள்ளையடித்த அமைச்சர் சந்திரசேகர்! அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு
கருப்பு ஜூலை நாளை வெள்ளையடிக்கும் விதமாக அமைச்சர் சந்திர சேகரனும் , நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் நேற்றையதினம் யாழில் விழாவொன்றினை கொண்டாடியிருந்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“காலம் காலமாக மற்றைய அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்ததோ அதனையே அநுர அரசாங்கமும் செய்கின்றது.
ஜேவிபி அரசாங்கத்திடம் அடிப்படை கல்வி தகுதியுடைய ஒருவரை அமைச்சராக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அடிப்டை கல்விதமையில்லாத ஒருவரை ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமித்துள்ளீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.




