மீண்டெழுந்து விட்டது ஐ.தே.க.! - இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்கிறார் பாலித
ஐக்கிய தேசியக் கட்சி மீண்டெழுந்துவிட்டது. அக்கட்சியின் பலம் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியவரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர். மே தினத்தில் அவர்கள் மேடையேறுவார்கள் என நாம் கூறவில்லை.
தலைமைத்துவப் பிரச்சினை
அடுத்துவரும் நாட்களில்தான் அவர்கள் வருவார்கள். இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும். விழுந்துவிட்டது எனக் கூறப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி எழுந்துவிட்டது. எமது பலம் என்னவென்பது அடுத்துவரும் நாட்களிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் தெரியவரும்.
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவார் என நம்பவில்லை. ஐ.தே.கவில் தலைமைத்துவப் பிரச்சினை ஏற்பட்டபோதுகூட கரு ஜயசூரியவைப் பலிகடாவாக்கிவிட்டு சஜித் பிரேமதாஸ தப்பித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
