அநுர அரசிற்கு புதிய நெருக்கடி - நாடு முழுவதும் திட்டமிட்ட மின்சார தடை
இலங்கை மின்சார சபை மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கைமைய, 12,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம், அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மதியம் மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டது.
பணிப் புறக்கணிப்பு
நேற்று காலை கொழும்பில் சில இடங்களில் மின்தடை பதிவாகியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் செயல்முறையின் போது, ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri