லொத்தர் சீட்டு அச்சிடுவதில் பெரும் சிக்கல்
கொழும்பிற்கு வெளியில் மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் லொத்தர் சீட்டுகளில் கணிசமான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷான் மரம்பகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அதிகாரிகளிடம் வினவியபோது, லொத்தர் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான காகிதத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள் என கிருஷான் மரம்பகே குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக லொத்தர் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கு ஏற்ப லொத்தர்களை வழங்குவதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், லொத்தர் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லொத்தர் வியாபாரிகளின் பல பிரச்சினைகளை குறைத்து லொத்தர் கொள்வனவு செய்பவர்கள் தமது பணியை நியாயமான முறையில் செய்யக்கூடிய வகையில் லொத்தர் விநியோகஸ்தர்கள் பெறும் தரகு பணத்தை மேலும் அதிகரிக்குமாறு நிதியமைச்சிடம் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam