உக்ரைன் லிவிவ் நகரில் பயங்கரவாதத் தாக்குதல்: 23 வயது பொலிஸ் அதிகாரி பலி - 25 பேர் காயம்
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள லிவிவ் (Lviv) நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 23 வயது பெண் பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்டோரியா ஷ்பில்கா (Viktoria Shpylka) என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, போர் தொடங்கிய காலத்தில் இருந்தே சேவையில் ஈடுபட்டு வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்
ஒரு கடையில் திருட்டு முயற்சி நடப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற பொலிஸ் வாகனத்தின் அருகே குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையால் செய்யப்பட்ட வெடிகுண்டு முதலில் வெடித்தது.
அதனைத் தொடர்ந்து கூடுதல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது இரண்டாவது குண்டு வெடித்ததில், மொத்தம் 25 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 6 பொலிஸ் அதிகாரிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தத் கொடூரத் தாக்குதல் தொடர்பாக 33 வயதுடைய உக்ரைனிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
விசாரணையில், ரஷ்ய உளவுத்துறையின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பெண் இந்த வெடிகுண்டுகளைத் தயாரித்து வைத்தமை தெரியவந்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில்
இந்தத் தாக்குதலை ஒரு "பயங்கரவாதச் செயல்" என உக்ரைன் அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். லிவிவ் மேயர் ஆண்ட்ரி சடோவி மற்றும் உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமென்கோ ஆகியோர், இந்தச் சதித்திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி நான்காவது ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் (பெப்ரவரி 24), உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

சனிக்கிழமை இரவு மட்டும் ரஷ்யா ஏவிய 50 ஏவுகணைகள் மற்றும் சுமார் 300 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை எதிர்கொண்டது.
இந்தத் தாக்குதல்கள் மின்சாரக் கட்டமைப்பு, குடியிருப்புகள் மற்றும் ரயில்வே துறையை இலக்கு வைத்து நடத்தப்பட்டதில், தலைநகர் கிவ் (Kyiv) பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடக்கும் மிகப்பெரிய போராக இது மாறியுள்ள நிலையில், தற்போது உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam