பிரித்தானியாவில் மாணவர் கடன் வட்டி குறைப்பு
பிரித்தானியாவில் 2012 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 'பிளான் 2' (Plan 2) வகை மாணவர் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கப்போவதாக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் அறிவித்துள்ளார்.
சுமார் 58 இலட்சம் பேர் இந்த வகை கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய வட்டி முறை ஒரு "மோசடி" போலத் தெரிவதாகவும், பட்டதாரிகள் கடனில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து தான் அதிர்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சில்லறை விலை குறியீட்டுடன் (RPI) கூடுதலாக 3% வரை வட்டி வசூலிக்கப்படும் நிலையில், அதனை 3.8% என்ற அளவில் (RPI மட்டும்) உச்சவரம்பாகக் கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளார்.
மாணவர் கடன்
இதன் மூலம் மாணவர்கள் தங்களின் கடனை விரைவாகத் திருப்பிச் செலுத்த முடியும் என அவர் வாதிடுகிறார்.
மறுபுறம், கன்சர்வேடிவ் கட்சியினரின் இந்தத் திட்டத்தைக் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போதைய சிக்கலான மாணவர் கடன் முறையை உருவாக்கிய கன்சர்வேடிவ் கட்சியினரே இப்போது அதைக் குறை கூறுவது "வேடிக்கையானது" என அவர் சாடியுள்ளார்.
தொழிலாளர் கட்சி அரசாங்கம் மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் நியாயமான ஒரு முறையைக் கொண்டு வரப் பரிசீலித்து வருவதாகவும், பணவீக்கம் குறையும் போது கடனுக்கான வட்டி தானாகவே குறையும் என நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ட்ரம்பின் வீட்டிற்குள் நுழைந்த நபர் படுகொலை.. அதிரடியாக களமிறங்கியுள்ள FBI - வெளியாகும் பரபரப்பு தகவல்கள்
புதிய கோரிக்கை
இருப்பினும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வருமான உச்சவரம்பை முடக்கும் அரசின் முடிவிற்கு தொழிலாளர் கட்சியினுள்ளேயே சில எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் கல்வி அமைச்சின் செயலாளர் லாரா டிராட், வேலைவாய்ப்புகளை வழங்காத அல்லது பொருளாதார ரீதியாகப் பலன் தராத சுமார் 1,00,000 பல்கலைக்கழக இடங்களை மூட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, படைப்புக் கலைகள் போன்ற படிப்புகளை முடிப்பவர்களில் 75% பேர் தங்களது கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை என்பதால், அத்தகைய "பலனற்ற" படிப்புகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்திவிட்டு, அந்த நிதியை தொழிற்பயிற்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
லிபரல் டெமோக்ராட் கட்சியினரோ, பொதுத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு கடனில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam