கனேடிய நகரமொன்றில் அதிகரித்துள்ள வெப்பநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின்(Canada) முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில்(Toronto) வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் டொரன்டோவின் வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரப்பதனின் அளவு
காற்றின் ஈரப்பதனின் அளவு அடிப்படையில் இந்த வெப்பநிலையானது சுமார் 37 பாகை செல்சியஸ் அளவாக உணர நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றாரியோ மாகாணத்தின் அநேகமான பகுதிகளில் வெப்பநிலை நீடிக்கும் என கனேடிய தேசிய வளிமண்டலவியல் முகவர் நிறுவனம் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி காற்றின் தரம் குறைவடையும் எனவும் அறிவுறுத்தியுள்ளதோடு, நாளையும் 29 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam