யாழில் மாணவன் மீது ஆசிரியர் மிலேச்சத்தனமான தாக்குதல்
யாழ். திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் ஒருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
9ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் குறித்த மாணவனை அழைத்துள்ளார்.
மனிதாபிமானம் இல்லாத செயற்பாடு
எனினும் மாணவன் அந்த இடத்துக்குச் செல்லாததையடுத்து கோபமடைந்த ஆசிரியர் உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனைப் பெரிய தடியால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுவனின் கைகளில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்லாத செயற்பாடு என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |