நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறை : சிறை அதிகாரி வெளியிட்ட தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று(06.07.2026) காலை உணவு வழங்கும் போது இரு குழு கைதிகளுக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்து வன்முறை மீண்டும் தொடங்கியதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஏற்பட்ட ஒரு மோதலைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று சிறை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
நிறுத்தப்பட்டிருந்த சிறை அதிகாரிகள்
இருப்பினும், திங்கள்கிழமை காலை அதிகாரிகள் காலை உணவு வழங்குவதற்காக சிறைக்குள் நுழைந்தபோது, கைதிகளின் இரு குழுக்களும் மீண்டும் மோதிக்கொண்டுள்ளன.

சிறை அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைச் சீரமைக்க முயன்றபோது, கைதிகளால் தாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, கைதிகள் பின்னர் அதிகாரிகளைச் சிறையின் பிரதான வாயில் வரை துரத்திச் சென்று, அவர்களைத் தொடர்ந்து தாக்கி, நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.
வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த சிறை அதிகாரிகள், கைதிகள் நுழைவாயிலைச் சேதப்படுத்துவதைத் தடுக்கவும் அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றவும் முயன்றுள்ளனர், ஆனால் மீண்டும் ஒரு பெரிய கைதிகள் குழுவால் தாக்கப்பட்டுள்ளனர்.
25 பேர் உயிரிழப்பு
கூடுதல் சிறை அதிகாரிகள் தலையிட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தேவையான குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தினர் என்று திசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பல சிறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி, இந்த வன்முறைச் சம்பவத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், உயிரிழப்புகளின் முழுமையான அளவை அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.