கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சுரேஷ் சாலே..! தயார்நிலையில் மருத்துவ அறிக்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே வைத்தியக்குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, அவரது உடல்நிலை குறித்த முழுமையான அறிக்கையை வைத்தியக்குழு பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் சாலேவிற்காக வெடித்துள்ள போராட்டம்! குவியும் அரசியல்வாதிகள் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
சுரேஷ் சாலே கைது
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம்
சுரேஷ் சாலேயின் பாதுகாப்பிற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்றும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பல குழுக்களும் வைத்தியசாலைக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலேவை விடுதலை செய்யுமாறு இன்று (08) காலை முதல் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
YOU MAY LIKE THIS VIDEO
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan