மறு அறிவிப்பு வரும் வரை விழிப்புடன் இருக்கவும்..! கடலோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (08) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (09) காலை 10.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை அவதானம்
இந்த எச்சரிக்கையின்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அப்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் பயணம் செய்ய வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைத்தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரையிலும், கல்பிட்டிய முதல் பொத்துவில் வரையிலும் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அப்பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவும்
மேலும், மன்னார் முதல் பொத்துவில் வரையிலும் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு பெருந்தொகை வரி! நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam