வவுனியாவில் குளத்தில் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி
வவுனியா - மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக மாமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(18.01.2026) இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
வவுனியா - கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று(18) மாலை நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் எனும் உயர்தர வகுப்பு மாணவன் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan