பதற்றத்தினால் திடீரென மூடப்பட்ட வான்பரப்புகள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளமையினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் வழியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.
திட்டமிடப்பட்ட விமானங்கள் இயக்கம்
வான்வெளி மூடப்பட்டதன் விளைவாக மத்திய கிழக்கில் உள்ள நகரங்களுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.நேற்று ஏழு விமானங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டன.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் வழியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வான்வெளி மூடல்
இதேவேளை, வழித்தட மாற்றம் காரணமாக லண்டனுக்கான விமான பயணத்தின் நேரம் ஒன்றரை மணி நேரம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் விளைவாக, விமானத்தில் ஏற்றிச் செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பொதிகளின் எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் மாற்றங்களால் விமான நிறுவனத்திற்கு ஏற்படக்கூடிய நிதி இழப்பு பாரிய அளவில் இருக்கும் எனக் கருதப்பட்டாலும், இதன் பெறுமதி இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
பதற்றநிலை காரணமாக வான்வெளி மூடல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கடுமையாக பாதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈரானின் திட்டமிட்ட வான்வழி தாக்குதல்களால் மீண்டும் பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam