வெளிநாட்டில் சிக்கித்தவித்த இலங்கை அரசியல்வாதி! ரோம் புறப்பட்ட விமானம் குறித்து பரவும் தகவல்
இலங்கையிலிருந்து ரோம் நகருக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 1213 தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிக்கையை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 1213 தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை பயணிகளை திருப்பி அனுப்பும் நோக்கத்துடன் UL 1213 விமானம் நேற்று (09) ரோம் நகருக்குப் புறப்பட்டது என்றும், இதனால் ரோம் நகருக்கு நேரடியாகப் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் நாட்டிற்கு பயணிக்க முடியும் என்றும் மேலும் கூறுகின்றது.
உண்மைத்தன்மை
இருப்பினும், இந்த விமானம் ரோமில் சிக்கித்தவித்த ஒரு அமைச்சரை அழைத்து வர பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, சம்பந்தப்பட்ட அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்திருந்தார் என்று தொடர்புடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
விவாகரத்து வழக்கில் ரோஹினியை சிக்க வைக்க மனோஜிற்கு கிடைத்த வீடியோ, ஆனால்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam