ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் மீண்டும் ஒரு கடிதம்
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி இந்நிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை கடிதம் எழுதியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்றொழில் துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற 10 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கைக் கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திட உடனடியாக இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தக்கடிதத்தை எழுதியுள்ளார்.
ஸ்டாலின் கடிதம்
இந்தநிலையில் கடந்த 27 நாட்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 63 கடற்றொழிலாளர்கள் மற்றும் 5 படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைது என்ற தகவலையும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 2024 ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 கடற்றொழிலாளர்கள் மற்றும் 71 மீன்பிடிப் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 இந்திய கடற்றொழிலாளர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ள.
மேலும், 216 கடற்றொழிலாளர்கள் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் எனவே இந்த பிரச்சினை தொடராமல், தீர்வுக்காணப்படவேண்டியது அவசியம் என்றும் ஸ்டாலின் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam