சர்வதேச மனித உரிமைகள் தினம் தமிழர் பிரதேசத்தில் துக்க தினம்

Missing Persons Sri Lankan Tamils
By Parthiban Dec 12, 2023 07:40 AM GMT
Report

யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் அனைத்து மனித உரிமை மீறல்களையும் நிறுத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு, கிழக்கிலங்கையில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி பதினான்கு வருடங்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் தமிழர் பிரதேசத்தில் துக்க தினம் | Srilanka Missing Persons Protest

போரின் முடிவில், இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய உண்மை எப்போது வெளிவரும் என்பதே போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட முதன்மையான கேள்வி. “எமது உறவுகள் எமக்குக் கிடைக்கும்வரை அல்லது எமக்கு நீதி கிடைக்கும்வரை சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு துக்க தினமே” என போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி, மரியசுரேஷ் ஈஸ்வரி, போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : தமிழ் இளைஞன் வெட்டிக் கொலை

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : தமிழ் இளைஞன் வெட்டிக் கொலை


ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதியை வழங்கத் தவறியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “சர்வதேச சமூகத்தால் கூட தமிழ் மக்களாகிய எமக்கு நீதி வழங்க முடியவில்லை, ஏனைய நாடுகளில் குறிப்பாக உக்ரைனில் இடம்பெறும் யுத்தத்திற்கு கண்ணீர் வடிக்கின்றனர், ஐக்கிய நாடுகள் சபையும் அதுத் தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றது.

எனினும் இலங்கையில் மாத்திரம் தமிழர்கள் கொல்லப்பட்டு கிடங்கில் தள்ளப்படும்வரை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனினும் அந்த நேரத்தில் அவர்கள் இதனை கைவிட்டாலும், இந்த நேரத்தில் எமக்கு நீதியை வழங்க அவர்கள் ஏன் தயங்குகிறார்கள்? என்ற கேள்வி எமக்கு எழுகிறது.”

சர்வதேச மனித உரிமைகள் தினம் தமிழர் பிரதேசத்தில் துக்க தினம் | Srilanka Missing Persons Protest

வவுனியாவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் டிசம்பர் 10 ஆம் திகதியுடன் 2,485 நாட்கள் பூர்த்தியாகியுள்தோடு, மனித உரிமைகள் தினத்தையொட்டி போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வாக்கு நிறைவேற்றப்படவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?” என தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இரண்டு நாட்களில் 12 பேரை காணவில்லை:பொலிஸ் தலைமையகம் தகவல்

இரண்டு நாட்களில் 12 பேரை காணவில்லை:பொலிஸ் தலைமையகம் தகவல்


மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறுக் கோரியும், கிழக்கில் இடம்பெறும் சகலவிதமான மனித உரிமை மீறல்களையும் தடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக சிவில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் மனித உரிமைகள் தினத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்று முன்தினம் (10) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் பாற்பண்ணையாளர்களால் மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக செப்டெம்பர் 15 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 87ஆவது நாளாக தொடர்கின்ற நிலையில், மேய்ச்சல் நிலத்தை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை 150க்கும் மேற்பட்ட மாடுகள் படுகொலை செய்துள்ளதாக குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் தமிழர் பிரதேசத்தில் துக்க தினம் | Srilanka Missing Persons Protest

“மாடுகளை தொடர்ச்சியாக சுடுவதும், வெட்டுவதும், களவாடுவதும்தான் வேலையாக இருக்கிறது. அங்கு பொலிஸ் என்ற போர்வையில் ஒன்று போடப்பட்டுள்ளது. மாட்டை சுட்டுவிட்டார்கள் எனக் கூறினால் கரடியனாறு பொலிஸில் சென்று முறையிடுமாறு கூறுவார்கள். பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு சென்றுக் கூறினால் வெறுமனே பார்த்துவிட்டு இருக்கின்றார்கள். இப்படித்தான் எமக்கு நீதி கிடைக்கிறது.

நீதி எமக்குக் கிடைக்கப்போவது இல்லை. 153 மாடுகளை இழந்துள்ளோம் எனச் சொன்னால் அதன் பெறுமதியை பாருங்கள். இன்னும் இதற்கு ஒரு முடிவும் இல்லை. ஜனாதிபதி தீர்வைத் தருவதாக சொன்னார் எதுவும் நடக்கவில்லை.

ஒவ்வொருவரும் இப்படி எம்மை ஏமாற்றுகிறார்கள். யாரிடம் சென்றுக் கூறுவது.” கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும், கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்கும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வழங்குவதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்துமாறு கோரியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தனிநபர் ஒருவரை எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கும் புதிய கணினி அமைப்பு

இலங்கையில் தனிநபர் ஒருவரை எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கும் புதிய கணினி அமைப்பு


இதேவேளை, பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் டிசம்பர் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி நகரிலும், 11ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

75ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் தெற்கில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை, ஆனால் மனித உரிமைகள் நினைவேந்தல்களும் கூட்டங்களும் டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் தலைநகரில் பல பொது அரங்குகளில் நடத்தப்பட்டன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US