இலங்கையில் தனிநபர் ஒருவரை எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கும் புதிய கணினி அமைப்பு
நாட்டில் உள்ள எந்தவொரு நபரையும் எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கும் வகையில் புதிய கணினி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் தகவல்களை சேகரிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நிறுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது இன்று (12.12.2023) இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவல்கள் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி அனைத்து சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்தும் சேகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பணி யுத்த காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri