மத்திய கிழக்கில் போர் பதற்றம் - இலங்கையில் உணவுப்பொருட்கள் தொடர்பான அரசின் அறிவிப்பு
அடுத்த இரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
மத்திய கிழக்கின் நிலைமையை கருத்தில் கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் தடைகளை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
உணவு விநியோகம்
பண்டிகை காலத்திலும் அந்த இரண்டு மாதங்களிலும் உணவு பொருட்களை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

எனினும் உலக சந்தையில் ஏற்படும் விலை அதிகரிப்பை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அதனை தடுக்க எங்களால் முடியாது.
மேலும் ஏப்ரல் மாத இறுதி வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் எரிபொருளை வழங்க அரசாங்கத்தால் முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள்
இதற்கிடையில், மத்திய கிழக்கில் தற்போதைய போர் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை நிர்வகிப்பதற்காக உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா மற்றும் வர்த்தக, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.