தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ஜனாதிபதி ஐ.தே.கவிற்கு அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி, இன்றைய தினம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவ குழு இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் தலைமையில் கூடிய போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார மற்றும் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோர் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.