தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற நடவடிக்கை: சஜித் குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Politician Local government Election
By Rakesh Jan 24, 2023 07:09 PM GMT
Report

உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடும் புதிய முயற்சியாக நாளை (25.01.2023) கூடும் அரசமைப்பு பேரவை ஊடாகத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசின் இந்தச் சதிகளை ஜனநாயக ரீதியாகத் தோற்கடிப்போம் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று (24.01.2023) மேலும் கூறுகையில்,

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற நடவடிக்கை: சஜித் குற்றச்சாட்டு | Srilanka Crisis Political Situation Ranil Sajith

தேர்தலைத் தடுக்க பெரும் சதி

பல மாதங்களாக இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசுடன் தொடர்புடைய தரப்புக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டன.

ஒரு கட்டத்தில் அமைச்சரவை மேற்கொண்டதாக பொய்யான தீர்மானங்கள், மோசடித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை ஏற்காதிருக்கும் துரோக நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற நடவடிக்கை: சஜித் குற்றச்சாட்டு | Srilanka Crisis Political Situation Ranil Sajith

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் திறைசேரியின் செயலாளர் மூலம் தேர்தலுக்கான பணத்தை வழங்க முடியாது என்றும், அரசிடம் பணமில்லை என்றும், சமூக நலப்பணிகள் உட்பட சம்பளம் வழங்குவதற்குக் கூட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு, தேர்தலை ஒத்திவைக்கப் புதிய சூட்சுமத்துக்குத் தயாராகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவைச் சீர்குலைக்க முயற்சி

இந்தத் தேர்தலைச் சீர்குலைக்கும் புதிய நடவடிக்கையாக நாளை (25.01.2023) அரசமைப்பு பேரவையின் ஊடாகத் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றியமைத்து தேர்தல் ஆணைக்குழுவைச் சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மக்களின் இறையாண்மையில் கை வைத்தால் அதற்கு வழங்கும் தண்டனை நாட்டின் சட்டப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அமைச்சரவை தீர்மானம் மற்றும் திறைசேரி செயலாளர் ஊடாக மக்கள் இறையாண்மையை நாசம் செய்யும் முயற்சிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற நடவடிக்கை: சஜித் குற்றச்சாட்டு | Srilanka Crisis Political Situation Ranil Sajith

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலைச் சீர்குலைக்க அரசமைப்பு பேரவைக் கூட்டத்தைப் பயன்படுத்தினால், நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் வகையில் அந்தச் சூட்சும நடவடிக்கையை நிச்சயம் தோற்கடிப்போம்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அதேபோல், நாளை கூடும் அரசமைப்பு பேரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் தேர்தலை ஒத்திவைக்கும் சதித்திட்டங்களைச் சேர்க்க வேண்டாம் எனவும், சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்யக் கூடாது எனவும் அரசமைப்பு பேரவையின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற நடவடிக்கை: சஜித் குற்றச்சாட்டு | Srilanka Crisis Political Situation Ranil Sajith

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

மக்களின் இறையாண்மை

எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்நாட்டில் மக்களின் இறையாண்மையைக் கெடுக்கும் சகல சதிகளையும் முறியடிக்கத் தலைமைத்துவம் வழங்குவேன்.

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க எந்நேரத்திலும் முன்வருவேன்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற நடவடிக்கை: சஜித் குற்றச்சாட்டு | Srilanka Crisis Political Situation Ranil Sajith

தேர்தல் அவசியம் என அன்று நான் கூறிய போது சேறுபூசும் விதமாக குரல் எழுப்பியவர்கள் தற்போது தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர்.

தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் அனைத்து முயற்சிகளையும் தோற்கடிக்கத் தலைமைத்துவம் வழங்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US