இலங்கையில் திடீரென ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி - இருப்புக்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் போதுமான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
புதிய எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! சற்றுமுன்னர் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புக்கள்
இதேவேளை, 35,000 மெட்ரிக் டொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு வரும் கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள்கள் இரண்டும் இருப்பதாகவும், இந்த மாதம் மேலும் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளன.
அதன்படி, ஏப்ரல் இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்புக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
விலை மாற்றம்
எரிபொருள் இருப்புக்கள் இறக்கப்படும் நேரத்தில் உள்ள விலைகளின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும், எரிபொருள் கப்பல்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து நாட்டை வந்தடைய உள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam