இன்று முதல் QR குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!
இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (15.03.2026) முதல் நடைமுறைக்கு வருவதாக இலங்கையின் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
QR குறியீடு பெறும் முறை
இதன்படி, http://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.
அதில் முதலில் உங்கள் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் ரகசிய இலக்கத்தை (OTP) பதிவுசெய்ய வேண்டும்.

அந்த ரகசிய இலக்கத்தை பதிவு செய்வதன் மூலம் உங்கள் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து, உங்கள் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் வாகனத்திற்கான விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
வழங்கப்படும் தகவல்கள் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் பதிவு நிறைவு செய்யப்படும்.
இறுதியாக, உங்களுக்கு தனிப்பட்ட QR குறியீடு (QR Code) வழங்கப்படும். அந்த QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், அதை உங்கள் தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும் முடியும்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri