போர் பதற்றத்திற்கு மத்தியில் எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க ஜப்பான் அதிரடி நடவடிக்கை!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஈரானின் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையை உலுக்கி வரும் நிலையில், ஜப்பானின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜேரா நிறுவனம் மாற்று வழிகளைத் தேடி வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை
மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளிடமிருந்து அதிகப்படியான எல்.என்.ஜி (LNG) எரிவாயுவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் நீடித்தால் எரிவாயு விலை உயருவதுடன் விநியோகமும் தடைபடலாம் என்பதால், முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை (Hedging) மேற்கொள்வது அவசியம் என்று ஜேரா நிறுவனம் கருதுகிறது.
ஜப்பானின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்குத் தேவையான எரிபொருளை இந்த நிறுவனமே இறக்குமதி செய்கிறது.
எனவே, வரவிருக்கும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், மின் கட்டண உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவும் இந்த உலகளாவிய எரிசக்தி மாற்றுத் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உச்சக்கட்ட போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு! 24 மணி நேரத்தில் குறிவைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இலக்குகள்